உரும்பிராய் சந்திப் பகுதியில் இன்று (26) அதிகாலை இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் 12 இராணுவ வீரர்கள் உட்பட 15 பேர் காயமடைந்துள்ளனர்.
மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமும் இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற கன்ரர் வாகனமும் மோதி இந்த விபத்து ஏற்பட்டது.
சம்பவத்தில் இராணுவ வீரர்கள் 12 பேரும் சிவிலியன்கள் 3 பேரும் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையின் 24ம் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துடன் தொடர்புடைய டிப்பரில் இருந்த இருவர் தப்பிச் சென்றுள்ள நிலையில் விசாரணைகளை இராணுவ அதிகாரிகளும் பொலிஸாரும் மேற்கொண்டுவருகின்றனர்.
15 persons including 12 army personnels injured while a army canter and sand tipper collided in Urumpirai junction - Jaffna, this morning.

No comments:
Post a Comment